14 April 2014

இரண்டு குரல்கள்



காலக்குரல்
அடே வைரமுத்து
உலகு மீதான உனது வியப்பு
தீர்ந்தாலும் தீருமொருநாள்
அற்றாலும் அற்றுப்பொகும்
பட்டாம்பூச்சியின் சிறகில்
பயணிக்கும் உன்னாசை
பெண்மூட்டும் உஷ்ணத்தை
வாங்கிப் பெருக்கும் வல்லமையை
செல்கள் இழக்கலாம் சிறுகச் சிறுக
போர்த்தொழில் போலும் புணர்ச்சி வேட்கை
குற்றேவலென்று குறுகியொழியலாம்
தேகத்தினுள்ளே ஒளிந்திருந்து
திடூரென்றொருநாள் வெள்ளையாய்க் குதித்துப்
பல்லில்லாதவனை மெல்லும் முதுமை
உறவுகளுக்குமுன் கிட்னியோ
கிட்னிக்குமுன் உறவுகளோ
உன்னைக் கைவிடும் திருநாள் வரலாம்
முன்பல்லில் நீ கொறித்த சூரியன்
கடைவாய்ப் பல்லில் கடித்த பூமி
அடிநாக்கில் அதக்கிய நெல்லிக்காய் நிலவு
நினைவுக்கயிறு துண்டித்தேடலாம்
மொழிகள்
அநாகரிகங்கள் ஆகிப் போக
எண்களால் மட்டுமே இயங்கலாம் உலகு
என்னதான் செய்குவை
அந்நாள் எய்துமுன்..?

கவிக்குரல்
அந்நாள் எய்துமுன்
அகோ என்
மாக கவிதைகள்!
ஐம்பூதங்களை உண்டு நிமிர்கள!
என்னில் திரண்டு என்னில் அடரந்து
உட்செல் துளைத்து உயிர்த்திரை கிழித்து
ஞான மின்னல் நாற்புறம் விசிறி
மோழிகள் உரச இடிகள் சிதறி
அண்ட சராசரம் விண்டு பொடிபட
சரசர சரவென சரமழை பொழிக!
சூரியன் அக்குள்
பூமியின் அல்குல்
ஆழ்கடல் மர்மம்
ஆகாய முதுகு
தீயின் நாவுகள்
காற்றின் சிறகுகள்
ஆதியின் முதல் நொடி
காலத்தின் கடைநொடி
எல்லாம் எல்லாம் எல்லாம் நனைக
மழையின் இழையில் மானுடம் மலர்க!