19 November 2009

மூக்குக்கண்ணாடி வாங்கப்போகிறீர்களா?

            நல்ல லென்ஸ்கள் விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். அப்படி வாங்கும் போது தரத்திற்கான உத்தரவாதச் சீட்டை கேட்டு வாங்க வேண்டும். சில கண்ணாடிகளில் நீங்கள் வாங்கும் வகை அதிலேயே பதிக்கப்பட்டிருக்கும். அதைப்பார்த்து வாங்கலாம்.

           விலை குறைவான, மட்டமான கண்ணாடிகள் உங்கள் கண்களால் பார்த்து வாங்க முடியாவிட்டாலும் அதை கண்ணில் போட்டவுடன் அதிலுள்ள குறைகளை கண்ணானது சட்டென உணர்ந்து பிரதிபலிக்க ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட கண்ணாடியைப் போட்டதுமே சிறிது நேரத்தில் அதை கழற்றி வைக்கத் தானாகவே தோன்றும். சில சமயம் கண்களில் நீர் வரும்... லேசான தலைவலி இருக்கும். எரிச்சலான உணர்வு கூட ஏற்படும்... இப்படிப்பட்ட நேரங்களில் மீண்டும் கண்ணையும் கண்ணாடியையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
  
              இப்போதெல்லாம் கண்ணாடியில் நாம் செய்யும் வேலைகளுக்கேற்ப பல வகைகள் வந்துள்ளன. கணிணி முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ANTI GLARE LENS இதை சுருக்கமாக ஏ.ஆர்.சி. எனவும் சொல்வார்கள்... தவர, பைஃபோக்கல் போடுபவர்களுக்கு ப்ரக்ஸிவ் லென்ஸ்... வெளியில் சுற்றுபவர்களுக்கு போட்டோ க்ரோ மேட்டி லென்ஸ்கள்-இவை வெளிச்சத்திற்கேற்ப குளிர்ச்சியாகவும், சாதாரணமாகவும் தானாகவே மாற்றிக்கொள்ளும். டின்டட், கீறல் விழாத வகைக் கண்ணாடிகளும் உள்ளன.
நம்மில் பலர் கண்ணாடிக்கு அதிக செலவழிக்க யோசிப்பதற்கு முதல் காரணம், அதை பராமரிப்பதில், பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைதான். அதற்காக மட்டமான கண்ணாடிகளை வாங்கி நம் கண்ணை நாமே கெடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல.

நன்றி-குமுதம் வார இதழ்.

‘என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி, நான் போகிற ஊரைப் பற்றி, அங்குள்ள பறவைகள், மிருகங்கள், மரங்கள், ஆறுகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்... எனவே உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மேல் அக்கறை செலுத்துங்கள். அன்பு செலுத்துங்கள். மனிதர்களை இயற்கையை ஓயாமல் படியுங்கள்’.
- எஸ். ரமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment