28 April 2010

அவளுக்கு ஓர் ஆடை - சில்க் ஸ்மிதா


வாலிப வசந்தங்களின்
திருவிழா தேவதையே!
செப்பனிடப்படாத சொப்பனமே!


மர்மம் சூழ்ந்த உன்
மரண வாசலில்
உனக்கு
மலர் தூவுகிறது!


வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கைப் படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!



அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்...
உன் ஆடைகளின் கதையோ
சோகமானது...
அவை அவிழ்ப்பதற்காகவே...
அணிவிக்கப்பட்டவை...


'நடிகை' என்று உன்னை
நாடு அழைத்தது!
எங்கள் முன்
ஒரு கேள்வியை
எறிந்தது உன் வாழ்க்கை!
'நடிக்காதவர்' யார்?


நீ தாலி கட்டாமல்
வாழ்ந்தது கூட
தவறல்ல-ஒரு
வேலி கட்டி வாழ்ந்திருக்கக் கூடாதா?


-மு. மேத்தா.
(சில்க் ஸ்மிதா இறந்த போது)

படித்ததில் பிடித்தவை!

பெண்களை வெறும் உடம்பாக நோக்காமல், அவர்களுடைய வீட்டோடும், அவர்கள் பின்புலத்தோடும், அவர்கள் அறிவோடும், அவர்கள் குணாதிசியங்களோடும் சுவீகரித்து நினைத்துக்கொள்ள வேண்டும். பொய் சொல்லாத பெண்ணாகவும், புறங்கூறாத நேர்மையாளியாகவும் பெண் இருந்தால் பழகுங்கள். இல்லையெனில் நீ எனக்கு முக்கியமில்லை என்று அந்நியப்படுத்துங்கள். பெண் என்பவள் அறிவு. பெண் என்பவள் அன்பு, பெண் என்பவள் அக்கறை, பெண் என்பவள் ஆதரவு என்று நின்த்துக்கொண்டால் உடம்பு பற்றிய சிந்தனை உடனே உறைந்து போகும்.                                                                                                    --- பாலகுமாரன். 

No comments:

Post a Comment