13 January 2013

2.50 லட்சம் பேருக்கு ஃபிரான்ஸில் தமிழ் எழுதவும், பேசவும் தெரியும்!



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது.


பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32, இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில் ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது.


டேவிட் கூறியதாவது:பிரான்சில் தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுள்ளனர். தமிழின் மீது ஏற்பட்ட பற்றுதலும், தமிழர்களின் கலாச்சாரமும், என்னை கவர்ந்ததால், தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன், என்றார். இவர் அணிந்திருந்த பனியனிலும் "தமிழன்' என எழுதப்பட்டு இருந்தது. நம்மில் பலர் படிப்பு, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற வற்றில், வெளி நாட்டினரை பின் பற்றி வரும் நிலையில், வெளிநாட்டினர் ஒருவர், தமிழனின் கலாச்சாரத்தை பின் பற்றி, தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வு பாராட்டுக்குறியதே.

தகவல்; தினமலர்

No comments:

Post a Comment