7 January 2010

ஊதிய உயர்வுக்கு 5 வழிகள்.



1. சம்பள உயர்வு பற்றி உங்கள் முதலாளியிடமோ, உயரதிகாரியிடமோ கேட்பதற்கு முன் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? எந்த வகையில் நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு முக்கியமானவர்? என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இப்ப நாம இருக்கிற தகுதிக்கு சம்பளம் கொடுக்கிறதே பெரிசு. இதுல சம்பள உயர்வெல்லாம் கேட்பது உங்களுக்கே அதிகபட்சமாகத் தோன்றினால் அந்த கோரிக்கையையே விட்டுவிடுங்கள். இல்லை... வாங்கும் சம்பளம் குறைவு என்று கருதினால் மட்டும் கேளுங்கள்.

2. நீங்கள் செய்யும் வேலைக்கு மற்ற அலுவலகங்களில் எந்த அளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். சம்பள உயர்வு விவாதத்துக்கு இது உதவும்.

3. அலுவலகத்தின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அது லாபமாக இயங்குகிறது. முதலாளியும், உயர் அதிகாரிகளும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே இது பற்றி பேசுங்கள்.

4. எனக்கு சம்பள உயர்வு வேண்டும் என்று முதலாளியிடமோ, உயரதிகாரியிடமோ முதலிலேயே கேட்காதீர்கள். அதற்கு முன்பாக உங்கள் வேலைத்தரம், அதை உயர்த்த மேற்கொண்டும் நீங்கள் செய்ய வேண்டியவை ஆகியவற்றைப்பற்றி விவாதியுங்கள். அதன் பிறகே சம்பள உயர்வு பற்றி பேசுங்கள். இது அவர்களைக் கவரும்.

5. எல்லாம் செய்தும் நினைத்தபடி சம்பள உயருவு கிடைக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். வேலை செய்வதையும் குறைத்துக் கொள்ளாதீர்கள். முன்பைவிட கடுமையாக வேலை செய்யுங்கள். ‘சே இவருக்குப்போய் குறைந்த சம்பளம் கொடுக்கிறோமே’ என்ற உணர்வு உங்கள் உயரதிகாரிக்கு நிச்சயம் வரும். பிறகென்ன நிச்சயம் சம்பள உயர்வுதான்!

நன்றி; நாணயம் விகடன்

No comments:

Post a Comment