24 April 2012

கோடைக்கு குளிர்ச்சி



வெந்தயத்தைதயிரில் ஊறவைத்து, சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுச்சூட்டைத் தணிக்கும்.


வெட்டிவேரைஇரவில் கொதிக்க வைத்து காலையில் வடிகட்டி சூடான சர்க்கரைப் பாகில் கலந்து பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

சித்தரத்தைவேரை இரவு தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் வேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் தொண்டைக்கட்டுக்கு நல்லது.


சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கிற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டால் உடலுக்கு ஏகக் குளிர்ச்சி.

  
கொத்துமல்லியுடன் வெல்லம்சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

அகலமானபாத்திரத்தில்நீரைக் கொதிக்கவிட்டு அதில் நன்னாரி வேர் முழுவதும் மூழ்கும்படி 5 நிமிடம் அப்படியே அடுப்பை எரியவிடவும்.

நீரை வடிகட்டி எடுத்து, தேவையான அளவு சர்க்கரைப் பாகை கம்பிப்பதம் வந்தவுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். தேவையானபோது நீருடன் 1:4 வீதத்தில் கலந்து கொள்ளவும்.


இஞ்சியைசின்னச்சின்னதாகவெட்டி மிக்ஸியில் அடித்து ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்


எலுமிச்சை சாறு 2 டம்ளர் எடுத்துக்கொண்டு, சர்க்கரை 3 டம்ளர் எடுத்து பாகு காய்ச்சி, ஜூஸ் விட்டுக் கிளறி 5 நிமிடம் கொதித்தபின் பாட்டிலில் பதப்படுத்தலாம். தேவைப்படும் போது 2 தேக்கரண்டியுடன் 1 டம்ளர் நீர் கலந்து பயன்படுத்தலாம்.

அன்பு
உன்உண்மையான அன்பு தெரியாதவர்களிடம்
உன் கோபத்தை காட்டதே,
ஏன் என்றால் அவர்களுக்குதெரியாது,
உன் கோபமும் ஒரு "அன்புதான்" என்று.................

6 comments:

  1. குளிர்ச்சியான பதிவு , அன்பின் வரிகள் அசத்தல் .

    ReplyDelete
  2. வந்து, படித்து, பாராட்டியமைக்கு நன்றி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  3. கோடையில் ஒரு நேர் வீழ்ச்சியில் நின்றது போல அருமையான பதிவு ஆரோக்கியமானதும் கூட நன்றி ..........கவிதை வரிகள் கூட கலக்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோவை மு.சரளா அவர்களே!

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் தங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  6. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழி சசிகலா அவர்களே!

    ReplyDelete