17 June 2012

மெட்ரோ ரயில் பிரியங்கா!



பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ளமெட்ரோ ரயில் நிலையம்...
வண்ணமயமான சிறகு ஒன்று, காற்றில்மிதந்து வருவது போல மெட்ரோரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாகடிரைவர் கேபினில் இருந்து விமான பைலட்போல ஒரு பெண் இறங்கினார். அவர் தான்.....

மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவர். பெயர்பிரியங்கா. வயது: 21.

வீட்டிற்கு போகும் அவசரத்திலும், புன்னகைசிந்தியபடி, தான் மெட்ரோ ரயில்ஓட்டுனரான கதையை கூறினார். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில்டிப்ளமோ முடித்தவர். மின்சார பயன்பாட்டில் அதிகசக்தியுடன் இயங்கும் மெட்ரோ ரயில் ஓட்டுனராகவேண்டும் என்பது இவர் கனவு.
இதற்காக நிறைய படித்து, நிறையஉழைத்து, தன் கனவை நனவாக்கிவிட்டார்.

டில்லி சென்று, அங்குள்ள மெட்ரோரயிலை, ஆறு மாதகாலம் ஓட்டி, பயிற்சி எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பும், சிக்னல்களின் முக்கியத்துவம் குறித்தே நிறைய வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின், பெங்களூரில் ஓடும் மெட்ரோ ரயிலின்முதல் பெண் டிரைவராக நியமனம்பெற்று, ஆயிரம் பயணிகளுடன் மகாத்மாகாந்திரோடு நிலையத்தில் இருந்து, பையனப்பஹள்ளி வரை, ரயிலை ஓட்டியமுதல் அனுபவம் மறக்க முடியாதது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த திரில்லான நேரமதுஎன்கிறார்.


வெற்றிகரமாக இவர் மெட்ரோவை இயக்கிவருவதை அடுத்து, தற்போது மேலும், மூன்றுபெண்கள், மெட்ரோ டிரைவராக நியமனம்பெற்றுள்ளனர்.
வேலை முடிந்ததும், பஸ்சை பிடித்து பெங்களூரில்இருந்து, 30 கி.மீ., தூரத்தில்உள்ள, தன் கனகபுரா கிராமத்திற்குபோய் விடுகிறார்.

விவசாயியின் மகளான இவர், தற்போது, வீட்டிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தாலும், நகரத்திற்கு இடம் பெயரவில்லை, காரணம், இனிமையான கிராம வாழ்க்கை பிடித்துவிட்டது இவருக்கு. மெட்ரோ ரயிலை பிரமாதமாக ஓட்டும்பிரியங்காவிற்கு, இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது.

நன்றி; தினமலர்.

3 comments:

  1. sirappana unmaiyil paratakkudiya seythi parattukal

    ReplyDelete
  2. வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி மாலதி!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி வலைஞன்! வலையகத்தில் இணைக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete