10 April 2011

அறிதல் அறிவித்தல்



சந்தோஷத்தை முகம் முழுக்கப்
பரத்திக்கொண்டு
கண்களில் ஒளிமின்ன –
முகமன் கூறாதீர் எனக்கு

தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உறுசாகமாய் ஆர்ப்பரிக்காதீர் –
வரவேற்கும் விதமாக
தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
‘எத்தனை காலமாச்சு பாத்து
என்று ஏங்காதீர்
இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை.

-          ---ஸோமா வனதேவதா
   
   தவறில்லாத மனிதர் யார்? 
   யாருக்கு அவமானமில்லை. யார் முதுகில் அழுக்கு இல்லை. பொய் சொல்லாத மனிதர் உண்டா? ஏமாற்றாத தொழிலாளி உண்டா? தவறில்லாத மனிதர் யார்? ஆசை இயல்பு. ஆசையின் பால் விளையும் அபத்தமும் இயல்பு.



No comments:

Post a Comment