3 April 2011

பள்ளிப்பருவ நாட்கள்



 யாரையும் அடிக்காத கமலம் டீச்சரின் பிரம்பும்,
காரை பெயர்ந்து மண்புழுதி அடிக்கும் ஒண்ணாம் வகுப்பும்,
மழைவாசம் அடிக்கும் சிலேட்டு பெண்சிலும்,
மூக்கொழுக போட்டியாய் படிக்கும் சோமசுந்தரமும்
துவைத்த சட்டையும், கிழியாத டிரவுசரும்,
மிளகாய்ப்பொடி தூவி நாவாப்பழம் விற்பவரும்,
பத்து பைசாவுக்கு பெட்டி திறக்கும் ஐஸ்காரரும்,
‘அ எழுதத் தெரியாமல் ஒண்ணுக்கிருந்த சிவலிங்கமும்,
நொண்டியும், கபடியும், குண்டு விளையாட்டும்,
உரச்சாக்குப் பையில் இலவச புத்தகமும்,
வறுத்த அரிசியும், வெல்லக்கட்டியும்,
இரண்டாம் வகுப்பு படிக்கும் தாஸ் அண்ணனும்,
‘மழை வருது, மழை வருது நெல்லு வாருங்கோ பாட்டும்,
எனக்கு அறிமுகமான அதே பொழுதுகளில்
எங்கேயோ பிறந்திருக்கிறாய் –
சக பயணியாய்.


--புலியூர் முருகேசன்.



முட்டாள்தனம்!

குரலை உயர்த்துவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது. கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன்மூலம் அவனை ஜெயித்து விட்டதாக நினைப்பது முட்டாள்தனம்.

No comments:

Post a Comment