10 December 2011

முதல் கோணல்... முற்றும் கோணலாகுமா...?

இது எனது ஐம்பதாவது பதிவு

நேற்று கொல்கத்தாவில் நடந்த கொடூர கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 90 ஐத் தாண்டியுள்ளது. மருத்துவமனைக்கென கட்டுமானம் கொண்ட கட்டிடத்தில் உடனடியாக தீவிபத்தை தடுக்க முடியாத காரணத்தினால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் சிலர் தப்பித்திருக்கலாம். மருத்துவமனையில் படத்த படுக்கையாய் நடக்க முடியாமல் இருந்த அத்தனை நோயாளிகளும் இந்த தீ விபத்தில் சிக்கியிருக்கின்றனர். உயிர்ப்பலியின் எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்க வாய்ப்பண்டு.


இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் புதிய தலைமை செயலகத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்கிற யோசனை எத்தனை விபரீதமானது என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும். ஆனால் மாறுமோ மனம். முதல்வரின் பிடிவாதம்தான் வெல்லுமோ?

இவருக்கு என்னமோ புதிதாக மருத்துவமனை மீது பாசம் வந்துள்ளது, அழகாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்கிறார், முதலில் இருக்கிற ஜார்ஜ் கோட்டை இட பற்றாகுறையினால் புது தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று ராணி மேரி கல்லுரியையும் அண்ணா பலகலைகழக வளாகத்தையும் சேதபடுதியது இவர்தான், இப்போது உலகிலேயே best Eco-friendly administrative building என புகழ பட்ட இந்த புதிய தலைமை செயலகத்தை மாற்ற நினைப்பதில் இருந்து இவரின் உண்மை முகம் தெரிகிறது. 


கருணாநிதி கட்டியது என்ற காரணத்தால்தான் இவர் இதை மாற்றுகிறார் என்றால் எப்படியும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், ஜார்ஜ் கோட்டை இடப் பற்றாக்குறை காரணமாக நான் வேறு ஒரு தலைசெயலகம் கட்டப் போகிறேன் என்று நம் வரிப்பணத்தை நிச்சயம் வீணடிக்கத்தான் போகிறார். நாமும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும்.  

கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நம் வரிப்பணத்தால் கட்ட பட்டது, அதை பெரும் பொருட் செலவில் மருத்துவமனையாக மாற்றபடுவதும் நம் வரிப்பணத்தில், இன்னும் புதிதாக இவரின் விருப்பத்திற்கேற்ப கட்டப்போகும் புதிய தலைமைச் செயலகமும் நம் வரி பணத்தில். ஆக ஓட்டுப் போட்டவன் எல்லாருமே கோமாளிகள். இவர்கள் எல்லோருக்கும் நெற்றியில் பட்டை நாமம. 


இது இந்த முதல்வரின் உச்ச கட்ட பழி தீர்ப்பு. ஹோட்டல் கட்டி அதை கோவில் ஆக்க நினைத்தால் என்ன நடக்குமோ அதுதான் இங்கயும் நடக்க இருக்கிறது. தி.மு.க.வினருக்கு எல்லா இடத்திலும் தங்கள் பேரை பதிக்கணும் இவங்களுக்கு அதை எடுக்கணும் இதுதானே இப்ப நடந்துகிட்டு இருக்கு. கடைசியில் ஒரு செலவுக்குப்பதில் இரு செலவுகள் என்று மக்கள் தலையில்தான் விடியப்போகிறது.

எந்த ஒரு கட்டிடத்தையும் மாற்றி அமைத்து , வேறு பயனுக்கு கொண்டுசெல்வது சாத்தியமே. இதற்கு நல்ல முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பெற்று, தகுந்த தொழில் நுட்பத்தை கையாளவேண்டும். மாற்றியமைப்பதற்கு நிதி மற்றும் தகுந்த கால அவகாசம் தரப்பட வேண்டும். நிதி மேலாண்மையில், எந்த ஒரு மாற்றமும், முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் விலையில், ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலே, நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படும். இங்கு அதையும் தாண்டி செல்லுமாகையால், பழைய உபயோகத்திற்கே கொண்டு செல்வது சிறந்தது. மருத்துவமனை புதிதாக கட்டுவது உத்தமம்.


முந்தய ஆட்சியாளர்கள் கோடி கணக்கில் நம்முடைய வரிபணத்தை செலவுசெய்து அதை முழுமையாக்காமல் சென்றுள்ளார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தக் கட்டிடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்காகவே பயன்படவேண்டும் ஏனெனில் மருத்துவமனைக்கான அடிப்படை வசதியே அக்கட்டிடத்தில் இல்லை. அக்கட்டிடத்தை திரும்பவும் கோடிக் கணக்கில் நம்முடைய வரிபணத்தை செலவுசெய்து மருத்துவமனையாக மாற்றுவது எளிதல்ல. 

அதேசமயத்தில் தலைமை செயலகதிற்காக உருவாக்கப்பட்டதை எந்தவித மாற்றமும் இல்லாமல் கட்டிடத்தை முழுமையாக்கி தலைமை செயலகமாக்க முனையாவிட்டாலும் ஏதோ ஒரு அரசு அலுவலகமாக செயல்பட ஆட்சியாளர்கள் முடிவு எடுக்க வேண்டும் சிந்திப்பார்களா ?
ஆட்சி மாறும்போதெல்லாம் முந்தைய அரசின் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் பணியை புதிதாக பொறுப்பேற்கும் அரசு செய்ய ஆரம்பித்தால் அது வெட்டி வேலையாகவே அமையும், மேலும் மக்களின் வரிப்பணமும், அரசின் நேரமும் வீணடிக்கப்படும்.


துக்ளக் ஆட்சியில்தான் யாரைப்பற்றியும் எதப்பற்றியும் கவலைப்படாமல் முடிகள் எடுக்கப்படும். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த கட்டடமே இடிந்தாலும் ஆட்சியாளர்கள் கவலை படப்போவதில்லை. அவர்களின் நோக்கமே நினைத்த்தை செயல்படுத்தியாக வேண்டும். சமீபத்திய பால், பேருந்து, மின்கட்டணங்களைப் போல. இதைத்தான் என்போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம், எவரும் (தினமலர் முதற்கொண்டு) ஒத்துக்கொள்ளவில்லை. இப்போதாவது தினமலரின் ஞானக்கண் திறந்திருக்கிதே!!! மகிழ்ச்சி!!!

முதல் அறிவிப்பு இப்படி என்றல் முதல் கோணல் முற்றும் கோணல் தானே அப்ப அண்ணா நினைவு நூலகம் நிலை அதுவும் இதே போல் தானே தனக்கு எல்லாம் தெரியும் என்றால் நம்பிக்கை தனக்குதான் எல்லாம் தெரியும் என்றால் தலைகனம் ஆனால் அதை தைரியம் என்று பாராட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது இது தான் நடக்கும்.


ஏற்க்கனவே வேறு ஒரு காரணத்திற்க்காக கட்டிய கட்டிடத்தை மாற்றுவது மக்களின் உயிரின் மீது விளையாடுவதற்கு சமமானது. அதுதான் இப்போது கொல்கத்தாவில் நடந்திருக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இதற்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? நாட்டுமக்களுக்கு நல்லது செய்ய தான் உங்களுக்கு பதவி கொடுத்தார்களே தவிர உங்கள் சொந்த பிரட்சனைகளைத் தீர்த்துக்கொள்ளவும், பழிவாங்கவும் இல்லை. 
(கொல்கத்தா மருத்துவமனையின் சில புகைப்படங்களையும் இணைத்திருக்கிறேன்.)

கவலைப்பட நேரம் ஒதுக்குங்கள்! 
கவலைப்பட என்று சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதற்கென்று பத்து நிமிடம் ஒதுக்கிக் கொண்டு அன்றைய கவலைகளையும் பற்றி வரியைக் கிரமமாகக் கவலைப்படுங்கள்.
கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு கவலைப்படுங்கள். பத்து நிமிடம் ஆனவுடன், இன்றைக்கு கவலைப்பட்டாயிற்று என்று தாளைக்கசக்கித் தூக்கி எறியுங்கள். இதன்மீலம் மற்ற நேரங்களை மகிழ்ச்சியுடன் செலவிடலாம்.

எம்.ஞானசேகரன்.

2 comments: