13 November 2011

முளை தானியம் எனும் அற்புத உணவு!

மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.

போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர். இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.


பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.

இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். 

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 


முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள். இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். 

இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.

இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார் 

.உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். 

எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான். 

நன்றி; தினமலர்

எதை முதலில் செய்யவேண்டும்?
வாழ்க்கையில் நீ முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியதென்ன தெரியுமா? எது அவசியமான நல்ல விஷயம் என்பதல்ல; அவசியமான நல்ல விஷயங்கள் பலவற்றுள்ளும் எதை முதலில் செய்ய வேண்டும், எதை இரண்டாவதாகச் செய்ய வேண்டும், எதைப் பின்னர் செய்ய வேண்டும் என்பதே!

10 comments:

  1. அருமையான உபயோகமான பதிவு...!!!

    ReplyDelete
  2. உங்கள் வலைப்பூவைப் பார்க்கும்போதே Firefox Browser கிராஷ் ஆகிறது, கொஞ்சம் சரி செய்யவும். பல முறை முயன்று, குரோமியம் பிரவுசரில் இருந்து பதில் எழுதியுள்ளளேன். [நன்றி தினமலர் எம்று போட்ட உங்க நேர்மைக்கு ஒரு சபாஷ்].

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே! நானும் ஃபயர்பாக்ஸ்தான் உபயோகிக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லையே! நல்ல செய்தி எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதே எனது நோக்கம். அங்கே என் பெயர் போட்டு நான் சாதிக்கப்போவது என்ன நண்பரே!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி நாஞ்சில் மனோ அவர்களே!

    ReplyDelete
  5. தற்போது சரியாகிவிட்டது. Google Toolbar தேவை என்று Firefox update செய்யாமல் இருந்தேன், தற்போது Firefox 8 போட்டவுடன் சரியாகிவிட்டது.

    ReplyDelete
  6. மீண்டும் வந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெயதேவ் தாஸ்!

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள , ஒவ்வொன்றுக்கும் விரிவான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரவாணி அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  9. எதை முதலில் செய்யவேண்டும்?
    வாழ்க்கையில் நீ முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியதென்ன தெரியுமா? எது அவசியமான நல்ல விஷயம் என்பதல்ல; அவசியமான நல்ல விஷயங்கள் பலவற்றுள்ளும் எதை முதலில் செய்ய வேண்டும், எதை இரண்டாவதாகச் செய்ய வேண்டும், எதைப் பின்னர் செய்ய வேண்டும் என்பதே!

    பயனுள்ள ஆரோக்கிய உணவுப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. தங்களின் வருகைக்கும் விரிவான பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

    ReplyDelete