13 October 2011

ஒரு பொம்பளை அப்படிச் செய்வாளா?!


பெண்களுக்கு நான் எதிரியில்லை. ஆனால் சில விமர்சனங்களை முன்வைத்தே ஆகவேண்டியிருக்கிறது. சமீபகாலமாகப் பாருங்கள் பெண் குற்றவாளிகள் அதிகரித்திருக்கிறார்கள். ஆண்கள் ஈடுபடும் எல்லா வேலைகளுக்கும் இப்போது பெண்களும் போட்டி போடுகிறார்கள். அரசியலிலும் சரி மற்ற எந்த வேலைகளானாலும் சரி.

மாற்றம் வேண்டும். உரிமை எனபது அனைவருக்கும் பொதுவானது. ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் பெண்கள் தாங்களாகவே உரிமைகளை எடுத்துக்கொண்டு செயல்பட முடிவதில்லை.கணவனின் அல்லது பெற்றோரோரின் அனுமதியோடுதான் பொதுவாழ்வில் ஈடுபடமுடியும். இல்லையென்றால் எதற்கும் துணிந்தவர்களாக, எந்த அவதூறுகளுக்கும் செவிசாய்க்காதவர்களாக, குடும்பம் என்ற கட்டுத்தளை இல்லாதவர்களாக, அப்படி குடும்பம் இருந்தாலும் அதிகாரம் தன்கையில் உள்ளவர்களாக, இல்லாத பட்சத்தில் விவாகரத்து செய்துகொண்டு தனியே வாழத்தலைப்பட்டவர்களாகத்தான் இருந்தாக வேண்டும்.


அரசியலை எடுத்துக்கொண்டோமானால் இந்திராகாந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, உமா பாரதி, நம்மூர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் எல்லாமே குடும்பம் என்ற வளையத்துக்குள் சிக்கவில்லை. அல்லது எவருடைய கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. தன்னிச்சையாக செயல்படவும், சிந்திக்கவும், முடிவெடுக்கவும் துணிந்தனர். இது எப்படி? முடிந்தது.

அதிகாரமும் பதவியும் கையிலிருந்தால் ஆணென்ன, பெண்ணென்ன? எல்லாம் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் ஆண் அரசியல்வாதிகளைவிட பெண் அரசியல்வாதிகள் மிக பலம் பொருந்தியவர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருந்தனர். இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு அதிகார பீடங்களைக் கைப்பற்றியவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் கணவருடைய கைப்பாவையாகவே செயல்பட்டனர். ஆனால் போகப்போக அதிகார பதவியின் ருசியை சுவைக்கத் தொடங்கியவுடன் பெண் அரசியல்வாதிகளும் அப்படியே மாறிப்போயினர். சம்பாதிப்பது ஒன்றே அவர்களின் இலக்கு.

இப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலும், கள்ளக்காதல் விவகாரங்களிலும் பெண்களின் பெயர்கள் அதிக அளவில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. எப்படியும் பணம் சம்பாதிக்கலாம். இருக்கிறவரை அனுபவித்துவிட்டுப்போ என்ற புதிய நச்சு சிந்தனை எல்லா மட்டங்களிலும் பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விபச்சாரமும், திருட்டு, கொலைக்குற்றங்களும் அதிகரித்து வருகிறது. 

இதில் பெண்களின் பங்கும் இருப்பதுதான் வேதனை. ஆனால் சமூகத்திலோ பெண்ணுக்கு பரிதாபம் இரக்கம், சட்டச்சலுகைகள் என்ற பாதுகாப்பு அரண்கள் நிறைய. சுலபமாக ஒரு பெண் இப்போது எந்தக்காரணமுமே இல்லாமல் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கணவன் மீதோ கணவன் குடும்பத்தார் மீதோ வழக்குத்தொடுக்க முடியும். நீதி, நியாயம் பேசுபவர்கள் எல்லாம் பழைமைவாதிகளாகி விட்டனர்.

இந்தச் செய்தியைப் பாருங்கள்........

காரைக்குடி:வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும், பலரிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை, "அபேஸ்' செய்த, "மோசடி' பெண்ணிடம், காரைக்குடியில் போலீசார் விசாரணை நடத்தினர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 42. பரத நாட்டிய கலைஞரான இவர், ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். பரதம் தெரிந்ததால், நாட்டிய பள்ளியையும் நடத்தி வந்தார்.சென்னையில், "கலைமாமணிகள் நடராஜ் சகுந்தலா' என்ற பெயரில், அறக்கட்டளை நடத்தினார். நாட்டியம், அறக்கட்டளை வைத்திருந்ததால் வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., என வசதி படைத்தவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு புவனேஸ்வரிக்கு கிடைத்தது.
பல லட்ச மோசடி: உறவினர் ஒருவர் அமைச்சராக இருப்பதாகவும், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி மதுரை, தேனி, தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சிலரிடம், 2 லட்சம் முதல், 16 லட்ச ரூபாய் வரை வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள், அரசு வேலை கிடைத்துவிடும் என காத்திருந்தனர். ஏமாந்த சிலர், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவரது மொபைலும், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததால், பணம் கொடுத்தவர்கள், போலீசில் புகார் செய்தனர்.
போலீசில் புகார்: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரைச் சேர்ந்த பாலமுருகனிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். புவனேஸ்வரி சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, செப்., 27ல், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பாலமுருகன் புகார் கொடுத்தார்.மோசடி பெண் புவனேஸ்வரியை, கடந்த 29ம் தேதி கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் புவனேஸ்வரியை காரைக்குடிக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்: விசாரணையில், பாலமுருகனை போன்று தமிழகம் முழுவதும் பலரிடம் பல கோடி ரூபாய் வரை நகை, பணத்தை மோசடி செய்த விவரம் போலீசாருக்கு தெரிந்தது. புவனேஸ்வரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கடந்த, 10 மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியது, குழந்தைகளுக்கு பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தது, பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும், வங்கியில் கடன் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரது தகவலின்படி, காரைக்குடி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். ஏற்கனவே பணம், நகை கொடுத்து ஏமாந்தவர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு கருதி போலீசார் புவனேஸ்வரியை வீட்டிற்குள் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும், புவனேஸ்வரி, சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
நகை, பணம் இழந்தவர்கள் பட்டியல்:காரைக்குடி வி.வி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் மரகதம், 56. இவரது மகள் சுதாவிற்கு ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, இவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் 7 சவரன் நகை.திருச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டேவிட், மனைவி நவனீதபோஸ்கோசகாயம் என்பவரிடம் ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, 7 லட்ச ரூபாய்.காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த ஆறுமுகம், நடராஜன் சகோதரர்களிடம் பழைய விலையில், "கார்' வாங்கி தருவதாகவும் ஒரு லட்ச ரூபாய்.புவனேஸ்வரி குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடமே, 2.5 லட்ச ரூபாய் வரை பணத்தை, "அபேஸ்' செய்தது தான் ஹைலைட்டான விஷயம்.  

தவிர, சிறு குழந்தைகளுக்கு நடனம், பாட்டு கற்றுத்தருவதாகவும் கூறி அவ்வப்போது, 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். காரைக்குடியில் மட்டும் ஆட்டோக்காரர்கள் முதல் வி.ஐ.பி., அனைவரும் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தது விசாரணையில் தெரிய வந்தது.
 
பெண்களை ஏமாற்ற நாடகம்:அமைச்சர் எனக்கு நெருங்கிய உறவினர் எனக்கூறி பலரிடம் தன் கைவரிசையை காட்டியுள்ளார் புவனேஸ்வரி.கணவனுக்கு தெரியாமல் குழந்தையின் கொலுசு, செயினை அடமானம் வைத்து பல பெண்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.ஒரே குடும்பத்தில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் பணம் கொடுத்து ஏமாந்து தான் பெரிய விஷயம்.

இப்படி யார் யாருக்கோ நெருக்கம் என்று கூச்சமில்லாமல் கூறித்திரியும் விலைமாதர்களிடமெல்லாம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வீண் செய்யும் வீணர்களின் கூட்டத்தை என்ன சொல்வது?

4 comments:

  1. அண்ணே ஒரு பொண்ணு எதையும் செய்வாள்

    ReplyDelete
  2. ஏமாறும் அன்பர்களுக்கு ஒரு நல்ல பதிவு . நன்றி

    ReplyDelete
  3. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சேகர் அவர்களே! தொடர்ந்து வருகை தாருங்கள்!

    ReplyDelete