29 October 2011

என்னைப் பிடிக்கவில்லையா?

 
ஒரு போராட்டத்திற்குப் பிறகு உன் தோட்டம் வந்து
உன்னிடம் பூக்களை யாசித்தேன் – நீயோ
என் எடைக்கு எடை விறகு கொடுக்கிறாய்.
இந்தப் பாலைவனத்திற்கு மேல்
ஒரு மேகம் மையமிட்டது – அது
மழை விழுதுகளை இறக்கும் என்று பார்த்தால்
இடியை அல்லவா இறக்கிவிட்டது.

காதலைக் கூட பௌரிகமாய் இரசாயணமாய்ப்
பார்க்கக் கூடாது பெண்ணே!
கண்ணீர் எங்கிருந்து வருகிறது என்றேன் நான்!
கண்ணீரில் உப்பு எங்கிருந்து வருகிறது என்றாய் நீ!

என்னைப் புரியவில்லையா?
அல்லது உனக்குப் புரிந்துவிட்டது என்பது
எனக்குப் புரியவில்லையா?
என் தாகத்திற்கு ஒரு குவளை நீர் கேட்டேன்.
நீயோ இந்துமகா சமுத்திரத்தின் நீள அகலம் பேசுகிறாய்.

என் கண்கள் பொங்குவதை அவள் கவனித்தாள்.
கண்கள் இதயத்தின் ஜன்னல்களாம்.
அந்த ஜன்னல்களுக்கும் நீர்த்திரை போட்டு
இப்படி மறைத்தால் எப்படி?
உண்மையைச் சொல்!
உனக்கு காதலைப் பிடிக்கவில்லையா?
அல்லது என்னைப் பிடிக்கவில்லையா?


வெற்றி!
வெற்றி என்பது 98 சதவிகிதம் வியர்வை சிந்தும் உழைப்பு, 2 சதவிகிதம் காரியத்தை முடிக்க வேண்டும் என்ற ஊக்கம். ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ், செல்வம், மதிப்பு போன்றவைகள் அவனுடைய புத்திசாலித்தனமான உழைப்பைப் பொறுத்துதான் அமையும்.

1 comment:

  1. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    பதிவர் சந்திப்பு

    ReplyDelete